"இந்தியா"வை பார்த்து பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுவது பாஜகவினர்தான்.. சு.வெங்கடேசன் கிண்டல்
சென்னை: இந்தியா என்ற பெயரை பார்த்து பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுவது பாஜகவினர்தான் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியது. இந்த நிலையில் இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 9, 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டின்னரை அளிக்கிறார். இதற்கு அவர் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பிதல்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வரும் அறிவிப்புகள், இது போன்ற அழைப்பிதழ்களில் இந்திய குடியரசுத் தலைவர் அதாவது President of India என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஜி20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் President of Bharat என வெளியாகியுள்ளது. வரும் 18ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
“தமிழ்நாடு” என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 5, 2023
இப்பொழுது “இந்தியா” என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜக வினர் மாறியுள்ளனர்.
பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல;
தேர்தல் பயம்.
இந்தியா வெல்லும். pic.twitter.com/D9CwxLmEZ5
இதற்கு காங்கிரஸ், திமுர உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்தியா என்ற சொல் பாஜகவிற்கு கசக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு" என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள்
இப்பொழுது "இந்தியா" என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்தியாவைக் கண்டு பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல; தேர்தல் பயம். இந்தியா வெல்லும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை லோக்சபா எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications