சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு!
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ கடந்த வியாழக்கிழமை விபத்தில் பலியானார். சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார். கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் முதலில் கட் அவுட் வைத்த கடை சீல் வைக்கப்பட்டது. அதன்பின் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதியப்பட்டது. அவர் தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இன்று எப்ஐஆர் பதியப்பட்டது. ஆனால் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை மட்டும் ஏன் கைது செய்யவில்லை, ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.ஜெயகோபால் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெயகோபாலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது. 10 பேர் கொண்ட பேர் போலீசார் குழு இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.முதலில் ஜெயகோபால் சென்னையில் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டது.
காலையில் நெஞ்சுவலி என்று கூறி ஜெயகோபால் மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் தற்போது அவர் அங்கு இல்லை. ஜெயகோபால் தனது வீட்டிலும் இல்லை. இதனால் அவர் தலைமறைவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறி போலீசார் அவருக்கு வலைவீசி இருக்கிறார்கள்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications