சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு!
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ கடந்த வியாழக்கிழமை விபத்தில் பலியானார். சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார். கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் முதலில் கட் அவுட் வைத்த கடை சீல் வைக்கப்பட்டது. அதன்பின் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதியப்பட்டது. அவர் தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இன்று எப்ஐஆர் பதியப்பட்டது. ஆனால் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை மட்டும் ஏன் கைது செய்யவில்லை, ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.ஜெயகோபால் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெயகோபாலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது. 10 பேர் கொண்ட பேர் போலீசார் குழு இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.முதலில் ஜெயகோபால் சென்னையில் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டது.
காலையில் நெஞ்சுவலி என்று கூறி ஜெயகோபால் மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் தற்போது அவர் அங்கு இல்லை. ஜெயகோபால் தனது வீட்டிலும் இல்லை. இதனால் அவர் தலைமறைவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறி போலீசார் அவருக்கு வலைவீசி இருக்கிறார்கள்.
-
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!











Click it and Unblock the Notifications