கஜா புயல் நிவாரணப் பணி... ரூ.2 கோடி நிதி வழங்கியது சன் குழுமம்
சென்னை: சன் குழுமம் சார்பில் கஜா புயல் நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சன் குழும நிர்வாகிகள் நிதி அளித்தனர்.
கடந்த 15-ம் தேதி இரவு தமிழகத்தில் கஜா புயல் கரையைக் கடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் சூறையாடப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசியல் கட்சிகள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் என பலர் உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், ரூ.2 கோடி நிவாரண நிதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சன் குழும நிர்வாகிகள் வழங்கினர்.
புயல் பாதித்து 12 நாட்கள் ஆகியும், சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. மேலும், நாளை முதலமைச்சர் பழனிசாமி திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
கஜா புயல் பாதிப்பில் இருந்து, கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வரும் டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு ரூ. 200 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications