"முஸ்லிம் வாக்குகள்".. மொத்தமாக அள்ள எடப்பாடியார் விடுத்த அம்பு.. செம அறிவிப்பு!
முஸ்லீம்களின் ஓட்டுக்களை அள்ள எடப்பாடியார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
சென்னை: மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இதனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை அள்ள, ஒத்த அறிவிப்பை கொண்டு முயன்றுள்ளார் எடப்பாடியார்.!
Recommended Video
கடந்த வருடம் கொரோனா தாக்கத்திற்கு முன்பு வரை, அதிமுக அரசை மிகப்பெரிய அளவுக்கு அசைத்து பார்த்தது சிஏஏ விவகாரம்தான்..!
உண்மையிலேயே எடப்பாடியாருக்கு அது ஒரு தர்மசங்கடமான காலகட்டம் என்றே சொல்லலாம்.. சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற முயன்றபோது, மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.. ஆனாலும், அதிமுக அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.. அதனால்தான், அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றவே முடிந்து.. இதுதான் தமிழகத்தில் பெரும் அதிருப்தியை தந்துவிட்டது.. சிறுபான்மையின மக்கள் கொந்தளித்து போனார்கள்..

எடப்பாடியார்
ஆனால், எடப்படியாரோ, சட்டமன்றத்தில் பொங்கிவிட்டார்.. முதல்வர் எடப்பாடி இன்று சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய பேச்சு காணொலியாக வைரலாகி வருகிறது. "ஏங்க.. சிஏஏ பற்றி மக்களை ஏன் பதற்றப்படுத்துகிறீர்கள்? சிஏஏ-வால் யாராவது பாதிக்கப்பட்டிருக்காங்களா? எங்கே, ஒருத்தரை காட்டுங்க பார்க்கலாம்? என்று எதிர்க்கட்சிகளை பார்த்து கோபமாக கேள்வி எழுப்பினார்..

தீர்மானம்
இதற்கு பிறகுதான், தமிழகம் முழுக்க இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.. இதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடியைச் சந்தித்து நேரடியாக கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தனர்.. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் கொதிப்பை தந்தது..

தொடர் போராட்டம்
இந்த தொடர் போராட்டங்களினால், தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.. மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை அதிமுக அரசு ஒடுக்கத் தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டி தாக்கினர்.. இவ்வளவும் எடப்பாடியாருக்கு பெருத்த அதிர்ச்சியாகவே வந்து விழுந்தது.

அமைச்சர்கள்
அப்போதுதான் பாஜகவின் அடிமை அரசு என்ற ஒரு பெயர், தங்கள் ஆட்சிக்கு விழுந்து வருகிறது என்பது லேசாக புரிய ஆரம்பித்தது.. இந்த விஷயத்தில் மத்திய அரசை நாம் ஆதரித்திருக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்திலேயே சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததும் முதல்வரை அப்போது யோசிக்கவும் வைத்தது. "நாம இந்த ஆட்சியில் எத்தனையோ நல்ல திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.. ஆனால், இப்படி ஒரு கெட்டபெயர் வந்துவிட்டதே.. சிஏஏ விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோம்... இப்படி இதை வைத்து காண்டு ஸ்டாலின் அரசியல் செய்யும்படி ஆகிவிட்டதே" என்று நொந்து போனார்.

முகமது ஜான்
இதற்கு பிறகுதான், மெல்ல தன் பிம்பத்தை மாற்றினார்.. அப்போது நடந்த, இடைத்தேர்தலில் பக்கத்திலேயே பாஜகவை நெருங்கவிடவில்லை.. சிறுபான்மை மக்களிடம் தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள பலவித முயற்சிகளை எடுத்தார்.. காஷ்மீர் விவகாரம், முத்தலாக் விவகாரம் தலைதூக்கி இருந்த சமயம், மாநிலங்களவை வேட்பாளராக முகமதுஜானை அறிவித்து தன்னுடைய வெற்றியை நூலிழையில் பெற்றது அதிமுக..பிறகு ராஜ்ய சபா சீட்டு விவகாரத்தில் இஸ்லாமியர் ஒருவருரை வேட்பாளராக அறிவிக்க யோசினை நடந்தது.. சிஏஏ அதிருப்தியில் இருந்து தப்புவதற்காக மட்டுமல்லாமல், இந்த சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும்தான் இப்படி ஆலோசிக்கப்பட்டது..

இஸ்லாமியர்
இது சம்பந்தமாகவே இன்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்படியார்.. சிஏஏ தொடர்பாக போராட்டம் நடத்திய அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளார்.. அந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே, போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டிருந்தாலும், இன்று அத்தனையும் தவிடுபொடியாகி உள்ளது. ஒட்டுமொத்த இஸ்லாமிய வாக்குகளின் முடிவுகளை அள்ள எடப்பாடியாரின் மற்றொரு அஸதிரமாகவே இந்த வழக்கு ரத்து அறிவிப்பு பார்க்கப்படுகிறது..

முஸ்லிம்கள்
பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்று முதல்வர் தன் வாயாலேயே இன்று தெரிவித்தாலும், இது அதிமுகவின் நலன் கருதியே என்பதை மறுக்க முடியாது.. எத்தனையோ நல்ல காரியம் செய்தும், இந்த ஒருவிஷயத்தில் கெட்ட பெயர் வந்துவிட்டதே என்று முதல்வர் அன்று கவலைப்பட்டதற்கு இன்று ஒரு தீர்வு கிடைத்துள்ளது.. இதன் பலனை வரும் தேர்தலில் அறுவடை செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications