ரேஷன்தாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷன் கடைகளில் இனி "இதுவும்" விற்பனை.. எகிறியடிக்கும் கடவுளின் தேசம்
சென்னை: ரேஷன் கடைகளில், வெறும் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்பனையாவதுதான், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அம்மா குடிநீர் என்று, அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தண்ணீர் பாட்டில் விற்பனை திட்டத்தை கொண்டு வந்தார்.. வெறும் 10 ரூபாய்க்கு, இந்த தண்ணீர் விற்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்டு: அரசு மருத்துவமனைகள், பஸ் ஸ்டாண்டுகள் என எங்கு திரும்பினாலும், இந்த 10 ரூபாய் தண்ணீர் பாட்டில்கள் விற்பனையில் முன்னணியில் திகழ்ந்தன.. இதற்காகவே அம்மா குடிநீர் என்ற பெயரில் குட்டி, குட்டி கடைகள் அமைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டது.. எளிய மக்களிடம் இந்த தண்ணீர் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதே பாணியைதான், இப்போது கேரளாவும் துவங்கி உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைக்க, கடந்த 2020ல் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த திலோத்தமன் வலியுறுத்தினார்.
ரேஷன் கடைகள்: ஆனால், தனியார் நிறுவனங்களோ, இந்த விலையை குறைக்க மறுத்துவிட்டன.. எனவே, ரேஷன் கடைகள் வாயிலாக சுத்தமான குடிநீரை லிட்டர், 11 ரூபாய்க்கு விற்பனை செய்ய 2020ல் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் அப்போது நிறைவேற்றப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், ரேஷன் கடைகளில், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு "ஹில்லி அக்வா" என்று பெயரிடப்பட்டுள்ளது..
இதே குடிநீர் வெளிச்சந்தையில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. கேரள நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான, கேரள நீர்ப்பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் இந்த குடிநீரை தயாரிக்கிறது.
ரேஷன் கடை ஊழியர்கள்: கடைகளுக்கு லிட்டருக்கு 8 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படுகிறது.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 2 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.. ஆக மொத்தம் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்பனை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா ரேஷன் கடைகளில் இந்த திட்டம் அமலாகி உள்ளது. இனிமேல்தான், இந்த குடிநீருக்கான வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்பது தெரியவரும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications