பென்ஷன்தாரர்களே.. வீட்டுக்கே வர்றாங்களாம்.. இருந்த இடத்திலிருந்தே உயிர்ச்சான்றிதழ்.. மத்திய அரசு செம
சென்னை: உயிர்ச்சான்றிதழ் குறித்து மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இது மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) என்பது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு ஓய்வூதியதாரரும், மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு வருடத்துக்கு ஒருமுறை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
புதுப்பிப்பது எப்படி: இந்த உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை அருகிலுள்ள இ-சேவை மையம், வங்கி கிளை, அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் புதுப்பிக்கலாம்...
ஒருவேளை, ஒரு வருடத்திற்கும் மேலாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையானால், உயிர்வாழ் சான்றிதழை மேலும் புதுப்பிக்கும் வரை மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படும்... ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏதேனும் மரணம் அடைந்தால் அத்தகைய ஓய்வூதியதாரரின் குடும்ப உறுப்பினர் இறப்பு சான்றிதழின் நகலை இந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதெல்லாம் இந்த திட்டத்தின் விதிமுறையாக உள்ளது.
உயிர் சான்றிதழ்: இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதில், நாடு முழுவதும் மொத்தம் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இருப்பதால், அவர்கள் வீட்டிலிருந்தே முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எண்ம உயிர் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு நடமாட முடியாத ஓய்வூதியதாரர்களிடம் உயிர் சான்றிதழை பெற அவர்களின் வீட்டிற்கு சென்று பெறும் வகையில் ஊழியர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.. இதன்மூலம் அறிதிறன் பேசியை பயன்படுத்தியும், வங்கி கிளைக்கு நேரில் சென்றும் உயிர் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்..

இது குறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில், முக அங்கீகார தொழில்நுட்பம் மூலமாக உயிர் சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்த விழிப்புணர்வை ஓய்வூதியதாரர்களிடம் வங்கிகள் ஏற்படுத்த வேண்டும்..
ஓய்வூதியதாரர்கள் நிம்மதி: நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் அல்லது மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று உயிர் சான்றிதழை பெற ஊழியர் ஒருவரை வங்கிகள் நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவானது, ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications