மூணாறு நிலச்சரிவு.. தமிழர்களின் துயர மரணத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல்
கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களை நடிகர் சூர்யா மறந்து விட்டதாக
சென்னை: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். விபத்தின் போது உதவி செய்த மலப்புரம் மக்களுக்கும் சல்யூட் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தமிழக ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக பதிவிட்டுள்ளார் சூர்யா.
கேரளாவில் மூணாறு அருகே ராஜமாலா தேயிலை தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இந்த விபத்திற்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு விமான விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பிரதமர், ஜனாதிபதி என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சூர்யாவின் ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சல்யூட் என்றும் கூறியுள்ள நடிகர் சூர்யா. விமானிகளுக்கும் எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்
சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு தமிழக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூணாறு தேயிலைத் தோட்ட தமிழர்களின் மரணத்திற்கு எந்தவித இரங்கலும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏழையின் உயிருக்கு மதிப்பில்லை
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் அனைவருமே ஏழை தொழிலாளர்கள். 80 பேர்வரை மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனார்கள். இதில் 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் மரணத்திற்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
Recommended Video

இரண்டு பேருக்கும் சொல்லியிருக்கலாம்
முதலில் நடந்த விபத்து மூணாறு தேயிலை தோட்டத்தில்தான். அந்த விபத்தில்தான் அதிக உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர்களின் மரணத்திற்கு இரங்கல் கூறாமல் விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்ததுதான் தற்போது விமர்சனத்திற்கு ஆளானது.

தாங்க முடியாத துயர நிகழ்வு
ட்விட்டரில் விமர்சனம் எழுந்ததை அடுத்து மூணாறு நிலச்சரிவு மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ளார் சூர்யா. இடுக்கி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனை தருகிறது. குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து இறந்து போனது வேதனை தரும் நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா.












Click it and Unblock the Notifications