அந்த ஆளுனு பேசுவது நியாயமா? என் கட்சியிலேயே ஆள் செட் பண்ணி திட்டுறாங்க! கொட்டி தீர்த்த ஆதவ் ஆர்ஜுனா
சென்னை: தனக்கு எதிராக, தங்களுக்கு ஆதரவான பத்து பேரை வைத்து ஊடகங்களில் கருத்து சொல்ல வைப்பது, என் கட்சியிலேயே நான்கு ஐந்து பேரை வைத்து திட்ட விடுவதெல்லாம் நடக்கிறது என கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா.
விசி கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துணை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டார். மேலும் கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள், சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளிட்டவை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது என பேசியது திமுக தலைமையை கோபத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என வெளியாகி வீடியோ நீக்கப்பட்டதும், பின்பு சேர்க்கப்பட்டதும், மீண்டும் நீக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி எம்எல்ஏக்களே ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு திருமாவளவன் தலையிட்டு இந்த விவகாரத்தை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என திமுக தலைமையை குறித்து பேசியது பிரச்சினையை பெரிதாக்கியது. இதனையடுத்து விசி கட்சியிலிருந்து அவர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், என் கட்சியிலேயே நான்கு ஐந்து பேரை வைத்து திட்ட விடுவதெல்லாம் நடக்கிறது என கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா. இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிடம் பேட்டியளித்துள்ள ஆதவ் அர்ஜுனா,"அவருக்கு அறிவு இருக்கா? அந்த ஆளுக்கு அறிவு இருக்கா? என பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி ஏற்றவர்கள் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடலாமா?. குறிப்பாக அந்த பொறுப்பில் இருந்து கொண்டு அப்படி பதில் சொல்லலாமா? என்பது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
என்னுடைய கருத்தை சொன்னேன். அந்த கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆதரவான பத்து பேரை வைத்து ஊடகங்களில் கருத்து சொல்ல வைப்பது, என் கட்சியிலேயே நான்கு ஐந்து பேரை வைத்து திட்ட விடுவது இதெல்லாம் நடக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே மதுவிலக்கு மாநாட்டை நடத்தினோம். அதில் எங்கள் தலைவர் திருமாவளவனின் பேச்சு சிறப்பாக இருந்தது. தலைவர் ஒரு நேரத்தில் மிகவும் அமைதியாக பேசினார்.
காரணம் கூட்டணி கட்சியிலிருந்து அதாவது திமுகவிலிருந்து நிர்வாகிகள் வந்திருந்த நிலையில் பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும் போது திமுகவின் இரண்டு தலைவர்கள் மேடையை விட்டு கிளம்பி விட்டார்கள். இதை பார்க்கும் போது எனக்கு கோபம் வருமா? வராதா? காஞ்சிபுரம் மாநாட்டில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது திருமாவளவன் எழுந்து போனால் எப்படி இருக்கும்,
அப்போது எனக்கு எழுந்த உணர்வை திருமாவளவனிடம் சொன்னேன். அப்போது அவர் பொறுமையாக இரு என்று சொன்னார். அந்த பொறுமை என்னிடம் இல்லாததால் தான் நான் அன்று அப்படி பேசினேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும். ஒரு கருத்தியலை உருவாக்க வேண்டும். எல்லோரும் சமம் என்ற கொள்கையை, கொள்கை உருவாக்கத்தை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய கொள்கை" என்றார்.












Click it and Unblock the Notifications