எஸ்வி சேகர் எந்த கட்சி? வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்தானே.. விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: "எஸ்வி சேகர் எதையாவது பேசுவார்.. வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டல் செய்துள்ளார்.
ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவானவர் நடிகர் எஸ்வி சேகர். பிறகு அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பாஜக ஆதரவாளராக உள்ளார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், அண்ணா திமுக என்ற பெயரில் அண்ணாவை நீக்கி விட்டால் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அம்மா என்ற பெயரை அண்ணாவுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் ஆவேசம்
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்த எஸ்வி சேகர் தனது சம்பளப் பணத்தை திருப்பி செலுத்த முடியுமா, ஓய்வூதிய பணத்தை திரும்ப கொடுப்பாரா என்று அடுக்கடுக்காக ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

எஸ்வி சேகர் பற்றி முதல்வர்
இந்த நிலையில், நான் உழைத்து சம்பாதித்த பணத்தை எதற்கு திருப்பி தர வேண்டும் என்று எஸ்விசேகர் பதில் வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், இன்று, திண்டுக்கல் வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது எஸ் வி சேகர் கருத்து பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது.

எஸ்வி சேகர் எந்த கட்சி?
முதல்வருக்கு இந்தி தெரியும் என்று எஸ் வி சேகர் கூறியுள்ளார். எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். முதலில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜகவை சேர்ந்தவரா? அப்படியானால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவே இல்லையே. லோக்சபா தேர்தலின்போது அதிமுக மற்றும் எங்களுடைய கூட்டணியைச் சேர்ந்த பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தோம். அப்போது எங்கேயுமே அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

எஸ்வி சேகர் ஒளிந்து கொள்வார்
முன்பு அவர் அதிமுகவில்தான் இருந்தார். அதிமுகவைதான் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால், 'அம்மா' அவரை நீக்கினார். எனவே அவருக்கு பதில் சொல்லதேவையில்லை. அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக நான் நினைக்கவில்லை. ஏனெனில், எஸ்வி சேகர் ஏதாவது பேசுவார், பிறகு வழக்கு வந்தால், ஓடி ஒளிந்து கொள்வார். இவ்வாறு சரமாரியாக பதிலடி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

பெண் பத்திரிக்கையாளர்கள்
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற புது காலகட்டம் அது. அப்போது, தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான், பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான மோசமான பேஸ்புக் பதிவை ஷேர் செய்திருந்தார் எஸ்வி சேகர். இது தொடர்பாக போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்வி சேகர் தலைமறைவாக இருந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications