Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. இந்த 16 மாவட்டங்களிலும் செம்ம மழை வரப்போகுதாம்.. எங்கேன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் கடுமையாகவே நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெப்பத்தின் தாக்கத்தை இந்த கோடை மழை குறைக்க தற்சமயம் உதவியுள்ளது.. அதற்கேற்றவாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

 மழைக்கு சான்ஸ்

மழைக்கு சான்ஸ்

அதன்படி, இன்று முதல் 4 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.. அந்த அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

 வானிலை

வானிலை

இதனால் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல நாளைய தினம், அதாவது, 4,5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..

 வார்னிங்

வார்னிங்

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று கூறியிருந்த வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் கூடுதலாக அறிவித்திருந்தது.

 மெயின் ஏரியா

மெயின் ஏரியா

இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.. இதனால் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. அதன்படி இன்று செங்கல்பட்டு, சென்னை, கோவை, காஞ்சி, தேனி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கடலூர், குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+