தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலைகள்.. நேரடியாக களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை: தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தென் மாவட்டங்களில் கொலைகள், பழிக்கு பழி வாங்கும் கொலைகள், முன் விரோத கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு சாட்சியாக எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடிந்தாலும் கடந்த 22 ஆம் தேதி ஒரே நாளில் நடந்த இரு வேறு கொலைகள்தான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
திண்டுக்கல் நகரில் கடந்த 13ஆம் தேதி இருவரை துரத்திச் சென்ற கும்பல் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்பகை
அது போல் கடந்த 22 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக நிர்மலா தேவி என்பவரின் தலையை வெட்டி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு போய் வீசினர். 2012 ஆம் ஆண்டு திண்டுக்கலை சேர்ந்த பசுபதி பாண்டியனை தூத்துக்குடியை சேர்ந்த சில வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு தூத்துக்குடி கும்பலுக்கு தகவல் கொடுத்த நிர்மலா தேவியை பழிக்கு பழியாக கொன்று அவரது தலையை பசுபதி பாண்டியன் வீடு முன்பு கொண்டு போய் வைத்தது.

அச்சம்
இதையடுத்து அன்றைய தினமே திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளி ஸ்டீபன்ராஜ் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். ஒரே நாளில் நடந்த இரு கொலைகளால் திண்டுக்கல் நகரில் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக்தில் கடந்த இரு தினங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையால் 2,512 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள்களை பறிமுதல் செய்து அவர்களிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

சைலேந்திர பாபு
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நடந்து வரும் தொடர் கொலை சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தென் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

2513 ரவுடிகள்
அப்போது அவர் கூறுகையில் கடந்த 48 மணி நேரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2513 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது இல்லை. பழிக்குப் பழியாக குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications