ரஷ்ய தொழில்நுட்பத்தில் தயாராகும் நவீன T-90 பீஷ்மா பீரங்கிகள்.. விரைவில் ராணுவத்தில் இணைப்பு
சென்னை: ரஷ்ய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட உள்ள 464 பீரங்கிகள், இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன. இந்த பீரங்கிகள் HVF எனப்படும் சென்னையை அடுத்துள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக ரூ.13,448 கோடி மதிப்பீட்டில், 464 பீரங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. அண்டை நாடுகளின் அச்சுறுதல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதனை சமாளிக்கும் வகையில், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப, நமது ராணுவத்தையும் நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக, தற்போது T-90 பீஷ்மா என பெயரிடப்பட்டுள்ள பீரங்கிகளை தயாரித்து, அவற்றை இந்திய ராணுவத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த T-90 வகை பீரங்கிககள் ஒன்றும் சாதாரணமானது இல்லை. ரஷ்ய ராணுவத்தில் இந்த பீரங்கிகள் முதன்மையானதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகை பீரங்கிகளை இந்திய ராணுவத்தில் சேர்க்க கடந்த 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தப்படி ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்பங்களை வாங்கி, T-90 பீரங்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பு மேலும் உறுதிசெய்யப்படும் என ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications