சென்னை ஆகாய நடைபாதை..என்ன அழகு..எத்தனை அழகு..பாதுகாப்புக்கு சிசிடிவி..எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னை: தியாகராயநகரில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் நீளமான ஆகாய நடைபாதை மக்கள் பயன்படுத்த தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த ஆகாய நடைபாதையானது, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் நகரமாக விளங்கும் தியாகராய நகர், நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்வதால் எப்போதும் நெரிசலுடனேயே காணப்படும். இந்த நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகாய நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ரூ. 30 கோடி செலவில் தொடங்கிய ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இடையே 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா காரணமாக பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த ஆகாய நடைபாதையானது, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை, 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்திருக்கும் நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவின் மிக நீண்ட அகாய நடைபாதை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, "தி.நகர் நடைமேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்தை மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் அழகிய 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலமுள்ள இந்த நடைபாதை மேம்பாலத்தின் இரு முனைகளிலும் லிஃப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு,மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதை எங்கும் பொதுமக்களை கவரும் வகையில், வண்ண ஓவியங்கள் வரைப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை உள்ளன. பாலம் திறக்கப்பட்டப்பின், சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு தினசரி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications