அன்று இங்க் தெளிப்போம்..இன்று மேஜை உடைக்கிறார்கள்.. தருமபுரி மாணவர்கள் சஸ்பெண்ட்..அன்பில் மகேஷ்

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்தியுள்ளனர்.

 Table broken in Dharmapuri government school 5 students suspended saya Anbil Mahesh

மாணவ, மாணவர்கள் அமர பயன்படுத்தும் மேஜை, டேபிள் போன்றவற்றை கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாணவர்களுடன் சேர்ந்து மாணவிகளும் வகுப்பறையை சேதப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு முடிந்து இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பள்ளி கல்வி முடிந்ததை கொண்டாடும் வகையில் வகுப்பறையில் உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து விளையாடியுள்ளனர். இவ்வாறு அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோர் வேண்டுகோளாக உள்ளது. மேஜை உடைத்ததால் அடுத்த கல்வி ஆண்டு வரும் மாணவர்களுக்கு அமர மேஜை இல்லாததால் அவர்கள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

இதனிடையே பள்ளி வகுப்பறை மேஜைகளை அடித்து உடைத்த மாணவ, மாணவிகள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து தருமபுரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், முன்பொல்லாம், தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள் என்று கூளினார்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+