2 மணிநேரம் காக்க வைத்த தவெக அமைச்சர்.. கோபத்தில் தாம்பரம் திமுக மேயர் - துணை மேயர் செய்த செயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கும், தவெக எம்எல்ஏ பல்லவிக்கும் குத்துவிளக்கு ஏற்றுவதில் பிரச்சனை வெடித்தது. இதையடுத்து தவெக எம்எல்ஏ பல்லவி வெளியேறினார். இந்நிலையில் தான் தற்போது தாம்பரம் மாநகராட்சி பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சரத்குமார் 2 மணிநேரம் தாமதமாக வந்ததால் திமுகவை சேர்ந்த தாம்பரம் மேயர் வசந்தகுமாரி மற்றும் துணை மேயர் காமராஜ் ஆகியோர் விழாவை புறக்கணித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் மேயராக வசந்தகுமாரி இருக்கிறார். அதேபோல் துணை மேயராக காமராஜ் உள்ளார். இவர்கள் இருவரும் திமுகவை சேர்ந்தவர். தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 52வது வார்டு முல்லை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது.

tambaram-dmk-mayor-and-deputy-mayor-boycotts-partk-launch-function-due-to-tvk-minister-sarathkumar-d

இந்த பூங்காவை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.1.98 கோடி மதிப்பில் பூங்கா நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த பூங்காவின் திறப்பு விழா நேற்று மாலை 6 மணிக்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் (தாம்பரம் தொகுதியின் தவெக எம்எல்ஏ) திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விழாவில் பங்கேற்பதற்காக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், 4வது மண்டலக் குழு தலைவர் காமராஜ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மாலை 5.30 மணிக்கே பூங்காவிற்கு வருகை தந்தனர். ஆனால் மணி 6 ஆகியும் அமைச்சர் சரத்குமார் வரவில்லை. இரவு 7.30 மணியாகியும் அமைச்சர் சரத்குமார் வரவில்லை. இதனால் அதிருப்தியான மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் மற்றும் கவுன்சிலர்கள் அங்கிருந்து அதிருப்தியில் வெளியேறினர்.

மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் உள்ளிட்டவர்கள், "தவெக ஆட்சியில், தாம்பரம் மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. திட்டமிட்டே, வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.
இவர்கள் வெளியேறிய நிலையில் இரவு 8 மணிக்கு அமைச்சர் சரத்குமார் வந்து பூங்காவை திறந்து வைத்தார். அப்போது அதிகாரிகள் மட்டுமே இருந்தனர்.

இதுபற்றி அமைச்சர் சரத்குமார் கூறுகயைில், ''எம்எல்ஏக்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி, முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்று வர தாமதம் ஆகிவிட்டது. விழாவுக்குப் புறப்பட்டு வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் வேறு இருந்தது. இதனால் தாமதம் ஆகிவிட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வேலையின் காரணமாக நான் தாமதமாக வரவில்லை. மக்களே எங்களை வரவேற்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் நம்மை குறை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். '' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+