ஜிஎஸ்டி சாலையில் பைக்கில் போறீங்களா? டிராபிக் சிக்னல்களில் வருகிறது மாற்றம்.. நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் போலீசார் அடுத்த மாதம் ஜிஎஸ்டி சாலையில் முக்கிய சந்திப்புகளில் 'இரு சக்கர வாகனங்களுக்கான முன்னுரிமை சிக்னலை' அறிமுகப்படுத்த உள்ளது. சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 35-40 வினாடிகள் முன்கூட்டியே சிக்னல் திறக்கும் வகையில் வசதியை ஏற்படுத்த உள்ளனர்.

Two-Wheeler Priority Signal என்று இதை அழைப்பார்கள். அதாவது கார்களுக்கு முன்பே பைக்குகளுக்கு 35-40 வினாடிகள் முன்கூட்டியே சிக்னல் திறக்கும். 180-வினாடி சிக்னல் சுழற்சி பயன்படுத்தப்படும். பாதசாரிகள் மற்றும் பைக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த சிக்னல் சிஸ்டம் பயன்படுத்தப்படும். பள்ளிக்கரணை போன்ற பரபரப்பான சந்திப்புகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக இந்த மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர். அதேபோல் சென்னையில் போக்குவரத்து பிரச்னையை சரி செய்யும் விதமாக சிக்னல்கள் பல மூடப்பட உள்ளன. இதற்கு பதிலாக யூ டர்ன்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஏற்கனவே சென்னையில் பல்வேறு முக்கிய சிக்னல்கள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்து பெரிய அளவில் மாற்றப்பட்டு உள்ளது.

சென்னையின் முக்கிய சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, 'ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னை முழுக்க தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-டர்ன் அதிகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது 200 அடி பல்லாவரம்-தொரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியில் தாம்பரம் போலீசார் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு அருகே இரண்டு யு-டர்ன்களை கொண்டு வந்துள்ளனர். அந்த சாலையில் இனி சிக்னல்கள் இருக்காது. வேளச்சேரியில் இருந்து பல்லாவரம் நோக்கி செல்லும் வாகனங்கள் காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் சென்று 200 மீட்டர் தூரம் சென்று ரேடியல் சாலையில் புதிதாக உருவாக்கப்பட்ட யு-டர்ன் வழியாக செல்ல வேண்டும்.

Tambaram GST road to have traffic priority signals for bikes and padestrians

இதனால் அங்கே பயண நேரம் 10 நிமிடம் வரை குறைந்துள்ளது. பல்லாவரத்தில் இருந்து பள்ளிக்கரணை நோக்கி செல்லும் வாகனங்கள் இனி காமாட்சி சிக்னலில் வலதுபுறம் திரும்ப முடியாது. அவர்கள் இடதுபுறம் சென்று, மயிலை பாலாஜி சந்திப்பிற்குச் சென்று, U-டர்ன் எடுத்து செல்ல வேண்டும். அதன்படி பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி அருகே வேளச்சேரி-தாம்பரம் சாலையில் இறங்குவதற்கு மேம்பாலத்தை இவர்கள் பயன்படுத்த வேண்டும். காமாக்ஷி மருத்துவமனை சிக்னலில் 30-40 வினாடிகள் நடைபாதை சிக்னல் மட்டும் இருக்கும்.

சிக்னல் மூடப்படும்:

இந்த திட்டத்தின் கீழ் பல சிக்னல்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூட போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நகரம் முழுவதும் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் 65 சிக்னல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த திட்டம் தற்போது ஸ்பென்சர், தேனாம்பேட்டை மற்றும் தி நகர் சிக்னல்களில் சோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஓஎம்ஆர், ஈவிஆர் சாலை மற்றும் 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பென்சர், நந்தனம் ஆகிய இடங்களில் சிக்னல்கள் மூடப்பட்டு, ஒருபுறம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வலப்புறம் திரும்பவோ அல்லது U-டர்ன் எடுக்கவோ மீடியன் U-டர்ன் சந்திப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் சிக்னல் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. எல்டாம்ஸ் சாலை மற்றும் தி.நகரில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலைக்கு சென்று, தேனாம்பேட்டை மெட்ரோ மற்றும் அண்ணா அறிவாலயம் சந்திப்புகளில் யு-டர்ன் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யு-டர்ன் அதிகரிப்பு

தற்போது சென்னையில் யு-டர்ன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது சிக்னலில் நிற்க வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக சாலையில் நேராக சென்று தேவையான இடத்தில் யு-டர்ன் போட வேண்டும். யு-டர்ன் போடும் இடத்தில் தேவையில்லாத பிளாக், டிராபிக் ஏற்படுவதை தவிர்க்க அங்கேயும் பேரிகேட் போடப்பட்டு உள்ளது.

Take a Poll

இதனால் எதிர்பக்கம் வரக்கூடிய வாகனங்களை தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் எங்கும் சிக்னல் இல்லாமல் வாகனங்கள் மிக வேகமாக செல்ல முடியும். காவல்துறை இந்த மாற்றங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி, பின்னூட்டத்தின் அடிப்படையில் மற்ற சிக்னல்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. OMR இல் உள்ள டைடல் பார்க் போன்ற சில சந்திப்புகளுக்கு சில கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தேவையான மாற்றங்களைச் செய்ய நெடுஞ்சாலைகள் போன்ற பிற துறைகளுடன் நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேரம் குறைப்பு

இப்படி சிக்னல்கள் மொத்தம் 8 இடங்களில் அண்ணா சாலையில் முதல் கட்டமாக நீக்கப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை முடியும் இடம் வரை சிக்னல் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நேராக செல்லும் வகையில் சிக்னல்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இந்த சாலையில் 1.30 மணி நேர பயணம் மொத்தமாக 40 நிமிட பயணமாக குறைந்துள்ளது.

இதனால் பயணிகள் எங்கும் நிற்காமல் வேகமாக செல்லும் வகையில் பயணம் எளிதாகி உள்ளது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தருவது போக்குவரத்து நெரிசல். இதை குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படியே தற்போது விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+