Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிட்நைட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் நகர்வலம்.. சிசிடிவி காட்சியால் தாம்பரத்தில் பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வலம் வருவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ஆயுதங்களுடன் கூடிய மர்மநபர்களின் நடமாட்டம் காரணமாக தாம்பரம் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் இது தொடர்பாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

Tambaram Peoples are afraid of the mystery persons rounded at midnight with Terrific weapons

அந்த வீடியோ காட்சியில் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஜெருசலம் நகரில் சில மா்மநபர்கள் நடமாடுகின்றனர், பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா நகர், டிடிகே நகர் பகுதிகளிலும் கையில்பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றி வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சியை கண்ட தாம்பரம் பகுதி மக்கள் கடும் பீதியடைந்து்ளனர். ஜெருசலம் நகர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டியிருக்கும் சில வீடுகளில் சமீபத்தில் பணம், நகை கொள்ளை போனது.

சிசிடிவி காட்சிகளில் கத்தியுடன் சுற்றும் மர்ம நபர்கள் கொள்ளையர்களா அல்லது முன்விரோதம் காரமணாக வேறு யாரையாவது குறிவைத்து சுற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர், இல்லத்தரசிகள் என பலரும் இந்த வீடியோவை பார்த்து பயந்துள்ளனர்

ஆயுதங்களுடன் சுற்றும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நள்ளிரவு ரோந்துப்பணியை போலீஸார் தீவிரமாக்கவும் கோரியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+