தாம்பரம் சேலையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வங்கதேச ராணுவத்தால் அதிரடியாக கைது.. பரபரப்பு தகவல்
சென்னை: சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்று வங்கதேச ராணுவம், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளது.

சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ ) ஜான் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சியாகும். இவர் மடிப்பாக்கத்தில் தங்கி இருந்தபடி சேலையூர் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். ஜான் செல்வராஜ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவ விடுப்பில் தொடர்ந்து இருந்து வந்த ஜான் செல்வராஜ், அண்மையில் மருத்துவ விடுப்பை நீட்டிக்கும் படி கடிதமும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் சேலையூர் எஸ்எஸ்ஐ ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சேலையூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணிகளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் செய்து வந்தார். இவர் ஏற்கனவே ஒரு முறை திருச்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ள ஜான் செல்வராஜ், தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக வங்கதேச எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. தாம்பரம் சேலையூர் காவல் அதிகாரி, வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications