Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் சேலையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வங்கதேச ராணுவத்தால் அதிரடியாக கைது.. பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்று வங்கதேச ராணுவம், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளது.

Tambaram Selaiyur Special Sub-Inspector arrested by Bangladesh Army

சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ ) ஜான் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சியாகும். இவர் மடிப்பாக்கத்தில் தங்கி இருந்தபடி சேலையூர் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். ஜான் செல்வராஜ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ விடுப்பில் தொடர்ந்து இருந்து வந்த ஜான் செல்வராஜ், அண்மையில் மருத்துவ விடுப்பை நீட்டிக்கும் படி கடிதமும் அனுப்பி உள்ளார். இந்நிலையில் சேலையூர் எஸ்எஸ்ஐ ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சேலையூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணிகளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் செய்து வந்தார். இவர் ஏற்கனவே ஒரு முறை திருச்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ள ஜான் செல்வராஜ், தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக வங்கதேச எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. தாம்பரம் சேலையூர் காவல் அதிகாரி, வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+