தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியின் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. மே 8 ஆம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்குகிறது என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் பொதுத் தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதை ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுமுதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Public Exam SSLC Anbil Mahesh Poyyamozhi

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2க்கு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வுகள் மீதான அச்சம் குறையும் விதமாகவும் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு தேதியை அறிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் விதமாகவும் தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று அறிவிக்கப்படுகிறது

அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி இன்று வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் பொதுத் தேர்வு கால அட்டவணை தேதி உறுதி செய்யப்பட்டு தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என்று கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

முன்கூட்டியே தொடங்குகிறதா?

அதன்படி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியபடி இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

* தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்
* பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும்.
* மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் - அன்பில் மகேஷ்
* தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.

* கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+