தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியின் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. மே 8 ஆம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்குகிறது என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் பொதுத் தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதை ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுமுதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2க்கு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வுகள் மீதான அச்சம் குறையும் விதமாகவும் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு தேதியை அறிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் விதமாகவும் தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று அறிவிக்கப்படுகிறது
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான தேதி இன்று வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பொதுத் தேர்வு கால அட்டவணை தேதி உறுதி செய்யப்பட்டு தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என்று கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
முன்கூட்டியே தொடங்குகிறதா?
அதன்படி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியபடி இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
* தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்
* பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும்.
* மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் - அன்பில் மகேஷ்
* தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
* கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications