தடை அதை உடை.. சாதித்து காட்டிய மாணவிகள்! +2 தேர்வில் பின்னுக்கு தள்ளப்பட்ட மாணவர்கள்!
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்ச்சி விகிதம் 95.03% ஆக இருக்கிறது. கடந்த முறையை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக தேர்ச்சியடைந்திருக்கின்றனர். இருப்பினும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.
மொத்தம் 26,887 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 3,181 மணவர்களும், கணித பாடத்தில் 3,022 மாணவர்களும் சென்டம் எடுத்திருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 8,21,570 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம். கடந்த முறை 94.56 சதவிகிதமாக தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 0.49% அதிகரித்திருக்கிறது. மாவட்ட வாரியாக பார்த்தால் அரியலூர் மாவட்டம் 98.82% எடுத்து முதலிடத்தில் இருக்கிறது.
- கடலூர் 96.06%
- அரியலூர் 98.82%
- பெரம்பலூர் 96.58%
- கோயம்புத்தூர் 97.48%
- திருப்பூர் 97.53%
- தூத்துக்குடி 96.19%
- கன்னியாகுமரி 97.01%
- விருதுநகர் 96.64%
- சிவகங்கை 96.71 %
- ஈரோடு 97.98%
மற்ற மாவட்டங்களில் விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. சமூக பொருளாதார ரீதியாக பெண்கள் கல்வி கற்பதற்கான சவால் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் கல்வியில் பெண்கள் முன்னணியில் இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications