சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,17,077ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. பல மாவட்டங்களில் பாதிப்பு 20க்கும் கீழாக உள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,17,077 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,615 பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருகிறார்கள்.

Tamil nadu 945 covid positive cases on today

நேற்று கொரோனா தொற்றால் 12 பேர் பலியாகிய நிலையில் இன்று அதைவிட அதிகமாக 17 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,109 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 1,060 பேர் மீண்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,96,353 பேர் மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 275 பேர், கோவையில் 91 பேர், செங்கல்பட்டில் 48 பேர், திருவள்ளூரில் 35 பேர், திருப்பூரில் 32 பேர், ஈரோட்டில் 32 பேர், காஞ்சிபுரத்தில் 37 பேர், சேலத்தில் 24 பேர், திருச்சியில் 21 பேர் மற்றும் மதுரையில் 22 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Tamil nadu coronavirus positive cases rises 945 on today. 17 people have been killed by covid 19 in a single day on today. Similarly 1060 cases have discharged from covid 19 in tamilnadu on december 30, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X