வேளாண் பட்ஜெட்: மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்.. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி?
சென்னை: முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். விளை நிலத்தின் செழிப்புக்கும் இயற்கை உரம் தயாரிக்கவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2020-2021ம் ஆண்டில் 89 லட்சத்து 6000 ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022-2023ஆம் ஆண்டில் 95 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு 2022 - 23-இல் 155 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது
2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் வழங்கப்படும்.
ஆடாதொடா, நொச்சி போன்ற தாவரங்களை தரிசு நிலங்களில் பயிரிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4,773 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு; கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு. வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. பசுந்தாள் உரம் பயிரிட நிதி ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயிர்மை இடுபொருள் தயாரிப்பு மையம் 100 குழுக்களுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் நடவுக்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு. சூரிய காந்தி சாகுபடியை 12,500 ஏக்கரில் விரிவாக்கும் திட்டத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications