Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டபை தேர்தல்.. தபால் வாக்குகள் ஆட்சியை தீர்மானிக்குமா? .. அசர வைக்கும் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் வழக்கமாக தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் போட அனுமதி உண்டு. ஆனால் இந்த முறை 80வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், பணியில் உள்ள ரயில்வே பணியாளர்கள், பணியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் என பலருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேர்தல் பணியில் உள்ள 4 லட்சத்து 91 ஆயிரம் பேரும் தபால் வாக்குகள் அளிக்க உள்ளனர். அந்த வகையில் மொத்தம் கிட்டத்தட்ட 6.5லட்சத்திற்கும் அதிகமான தபால் வாக்குகள் போடப்பட உள்ளது.

எவ்வளவு வாக்குகள்

எவ்வளவு வாக்குகள்

தற்போதைய நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள்

கொரோனா பாதித்தவர்கள்

மாற்றுத்திறனாளிகளில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதில் 28 ஆயிரத்து 159 பேர் தபால் ஓட்டுகள் போட்டிடுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்திருக்கிறார்கள்.

எவ்வளவு வாக்குகள்

எவ்வளவு வாக்குகள்

மொத்தமுள்ள 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 தேர்தல் பணியாளர்களில் 2 லட்சத்து 592 பேர் தபாலில் வாக்களித்துள்ளார்கள். மீதமுள்ளவர்கள் வாக்கு எண்ணும் மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குள் தபால் ஓட்டை அளிக்க போகிறார்கள்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தபால் வாக்குகளே ஆட்சியை தீர்மானிக்கும் நிலை வரலாம். மிகக்குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள பல தொகுதிகளின் வெற்றியை தபால் வாக்குகள் தான் கடந்த முறை தீர்மானித்தன. எனவே அதுபோன்ற நிலை வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+