தமிழக சட்டபை தேர்தல்.. தபால் வாக்குகள் ஆட்சியை தீர்மானிக்குமா? .. அசர வைக்கும் பதிவு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் வழக்கமாக தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் போட அனுமதி உண்டு. ஆனால் இந்த முறை 80வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், பணியில் உள்ள ரயில்வே பணியாளர்கள், பணியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் என பலருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேர்தல் பணியில் உள்ள 4 லட்சத்து 91 ஆயிரம் பேரும் தபால் வாக்குகள் அளிக்க உள்ளனர். அந்த வகையில் மொத்தம் கிட்டத்தட்ட 6.5லட்சத்திற்கும் அதிகமான தபால் வாக்குகள் போடப்பட உள்ளது.

எவ்வளவு வாக்குகள்
தற்போதைய நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள்
மாற்றுத்திறனாளிகளில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதில் 28 ஆயிரத்து 159 பேர் தபால் ஓட்டுகள் போட்டிடுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்திருக்கிறார்கள்.

எவ்வளவு வாக்குகள்
மொத்தமுள்ள 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 தேர்தல் பணியாளர்களில் 2 லட்சத்து 592 பேர் தபாலில் வாக்களித்துள்ளார்கள். மீதமுள்ளவர்கள் வாக்கு எண்ணும் மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குள் தபால் ஓட்டை அளிக்க போகிறார்கள்.

என்ன நடக்கும்
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தபால் வாக்குகளே ஆட்சியை தீர்மானிக்கும் நிலை வரலாம். மிகக்குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள பல தொகுதிகளின் வெற்றியை தபால் வாக்குகள் தான் கடந்த முறை தீர்மானித்தன. எனவே அதுபோன்ற நிலை வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications