தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது! உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ரவி
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடப்பாண்டுக்கான சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் அவர் உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி அவர் வெளியேறினார். மேலும் ஆளுநர் உரையானது நேரலையாகவும் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்திருந்தார். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அவரை சபாநாயகர் அப்பாவுவும், சட்டசபை செயலாளரும் புத்தகங்களையும் பூங்கொத்துகளையும் கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்திய நிலையில், சட்டசபையின் மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
தேசிய கீதம் இசைக்கப்படாதது மிகவும் வருத்தமளிப்பதாக கூறி ஆளுநர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரை பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வரும் நிலையில், இன்று அவர் உரையை வாசிப்பாரா என்ற கேள்வி பரபரப்புடன் எழுந்துள்ளது. மாநில சட்டமன்றத்தின் மரபுப்படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, சுமார் 9:25 மணியளவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை முழுமையாக அளிக்கப்பட்டது.
சரியாக காலை 9:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை ஆற்றத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் உரை நிகழ்த்தி முடித்தவுடன், சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவு, ஆளுநரின் உரையை தமிழில் முழுமையாக வாசிப்பார். இதுதான் மரபு. சபாநாயகர் வாசிப்புடன் முதல் நாள் கூட்டத்தொடர் நிறைவுக்கு வரும்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் உடனடியாக நடைபெறும். இந்தக் கூட்டத்தில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விரிவாக முடிவு செய்யப்படும்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications