Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபை அக்டோபர் 9ல் கூடுகிறது.. அனல் பறக்குமா? சபாநாயகர் அப்பாவு சொன்னதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக சபாநாயர் அப்பாவு கூறியுள்ளார். எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அலுவல் குழு கூட்டம் கூடி முடிவு செய்யும் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டன. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவடைந்து, சட்டசபை நிகழ்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன.

Tamil Nadu assembly session to start on 9th October says Speaker Appavu

சட்டசபை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி சட்டசபை வரும் அக்டோபர் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு கூட உள்ளதாக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய சபாநாயகர் அப்பாவு, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை சட்டசபைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றார்.

லோக்சபா தேர்தல் 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனவே சட்டம் ஒழுங்கு, அரசு திட்டங்கள் ஆகியவற்றை பற்றிய குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்பதால் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்க அரசு தரப்பினரும் தயாராக இருப்பார்கள். எனவே இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றும் எதிர்பார்க்கலாம்.

தேர்தல் காலகட்டங்களில் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை எழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே காவிரி நீர் பிரச்சினை பற்றி இந்த கூட்டத்தொடரில் பரபரப்பாக விவாதிக்கப்படும். கர்நாடாக அரசுக்கு எதிராக சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என்று எதிர்பார்க்கலாம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது பற்றி இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். மேலும் புதிய சட்ட மசோதாக்கள், அவசர சட்டங்கள், கூடுதல் செலவீனங்களுக்கான மசோதா போன்றவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதனிடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்டசபையிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று கூறினார். ஆனால் இந்த மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்பது தெரியாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அப்பாவு அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அப்பாவு கூறியுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+