தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 28ல் தொடக்கம்.. ஜூலை 1ல் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 31ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது:

சட்டசபை மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, வசதியாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 28ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 29ம் தேதி, 30ம் தேதி அரசு விடுமுறையாகும்.
ஜூலை 1ம் தேதி வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை, 2ம் தேதி, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வி, இளைஞர் நலம் போன்ற மானிய கோரிக்கைகள் வரும். இவ்வாறு தினமும் ஒரு துறைவீதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
ஜூலை 30ம் தேதி காலை, பதிலுரை அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். ஆகமொத்தம், விடுமுறை தினங்களை தவிர்த்துவிட்டு, 23 நாட்கள் பேரவை நடைபெறும். எல்லா நாட்களும் கேள்வி நேரமும் இருக்கும்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜூலை 1ம் தேதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான நிகழ்ச்சி நிரல் 28ம் தேதியே வெளியிடப்படும். அதில் இருக்கும். நீங்களே பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதியே எடுக்கப்படுமா என்ற நிருபர்கள் கேள்விக்கு, அஜென்ட்டா முன்கூட்டியே கொடுத்துவிடுவோம். வெளியிடப்பட்டு ஜூலை 1ம் தேதி 'நிகழ்ச்சி' என்று இருக்கும். அது என்ன என்பது அன்றுதான் தெரியும். இவ்வாறு தனபால் தெரிவித்தார். சபாநாயகர் பேட்டியை வைத்து பார்த்தால், ஜூலை 1ம் தேதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications