முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! TAPS திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கிறது
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த கூட்டம் நடைபெறுவதால், இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
வருகிற 20-ந்தேதி இந்த ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் உரையை வாசிக்கவிருக்கிறார். வழக்கமாக சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன், அரசு எடுத்துக் கொள்ள இருக்கும் முடிவுகளைப் பற்றி விவாதிக்க அமைச்சரவை கூடுவது நடைமுறையாக உள்ளது.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டமாக இருப்பதால், அனைத்து அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
சமீபத்தில் அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விரிவான ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர் பிரிவுகளின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்பதற்கான முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம். முக்கியமாக, சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு முன் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன. எனவே, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம், அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications