மொத்தம் 3 கேள்வி தான்.. அடாது மழையிலும் விடாது பிரஸ்மீட்! அதிமுகவை பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் முன் வைக்கப்பட்ட 3 கேள்விகளுக்கும் பளிச்சென பதிலளித்தார்.
அதன் விவரம் வருமாறு;

கேள்வி : வட சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாக உங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: வந்திருக்கிறது. அதை அப்போதைக்கப்போது அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: போன முறை இல்லாத அளவுக்கு தண்ணீர் எங்கேயும் பெரிய அளவில் இல்லை.
முதலமைச்சர் பதில்: நான் சொல்லக் கூடாது அதை, நீங்கள் சொல்கிறீர்கள்.
கேள்வி தி.நகர் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் இருக்கிறது. அதையும் சரி செய்ய......
முதலமைச்சர் பதில்: அதிமுக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதை சரி செய்ய வேண்டுமென்றால், ரொம்ப வருஷம் ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒன்றரை வருடத்திற்குள் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.












Click it and Unblock the Notifications