நோ அப்பாயிண்ட்மெண்ட்... அமைதிகாக்கும் டெல்லி அக்பர் சாலை.. காத்திருக்கும் தமிழக காங்.பிரமுகர்கள்..!
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்திப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு தமிழகத்தை சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் காத்திருக்கின்றனர்.
டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த பதிலும் வராததால் பலரும் மனச்சோர்வு அடைந்துவிட்டனர்.
கட்சிப்பதவி முதல் கூட்டணிக் கட்சியின் அணுகுமுறை வரை புகார் கூறுவதற்காக தான் தலைமையிடம் நேரம் கேட்டிருக்கின்றனர்.

தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை தலைவர்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு தலைவர்கள் நிறைந்த கட்சியாக தமிழக காங்கிரஸ் கமிட்டி திகழ்கிறது. திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாணிக்கம் தாகூர், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, என ஒவ்வொரு தலைவருக்கும் கணிசமான ஆதரவாளர்கள் வட்டம் உள்ளது. இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸ் இப்போது தொடங்கியுள்ளது.

யார் யார்?
அதில் செல்வப்பெருந்தகை, விஜயதரணி, ஜோதிமணி எம்.பி., கார்த்தி சிதம்பரம், செல்லக்குமார் என லிஸ்ட் நீள்கிறது. தமிழக பாஜகவில் பெண் ஒருவர் மாநில தலைவராக இருந்ததை போல், தமிழக காங்கிரஸில் பெண் ஒருவரை மாநில தலைவராக நியமிப்பது குறித்தும் அக்கட்சியின் தலைமை ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் விஜயதரணி எம்.எல்.ஏ.வும் ஜோதிமணி எம்.பியும் தலைவர் பதவிக்கான ரேஸில் பெண்கள் கோட்டாவில் இடம்பிடித்துள்ளார்கள்.

பதவிப்போட்டி
இதேபோல் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., செல்லக்குமார் எம்.பி. ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் சோனியாவையோ அல்லது ராகுலையோ நேருக்கு நேர் சந்தித்து பேசி விடவேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முக்கிய பிரமுகர்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர். சோனியா தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு பார்வையாளர்களை சந்திப்பதை பல மாதங்களாக தவிர்த்து வருகிறார்.

நேரம் ஒதுக்கீடு
இதனால் ராகுல்காந்தியை தான் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். சோனியா காந்தி நேரம் ஒதுக்காவிட்டாலும் பரவாயில்லை, ராகுலையாவது சந்தித்துவிட வேண்டும் என தமிழக கதர்ச்சட்டை பிரமுகர்கள் பலர் டெல்லிக்கு செல்வதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் ராகுல்காந்தியின் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கவில்லை. தமிழக கமிட்டி தலைவராக ஒரு வேளை செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டால் அவர் வகித்து வரும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி விஜயதரணி வசம் செல்ல வாய்ப்புள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications