சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் 19 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. 113 பேர் மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் 18,692 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 113 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 18,692 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு 113 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,66,756 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,046 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 18,692 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி - சமூக ஊடகத்தில் உதவி கேட்டால் நடவடிக்கையா? வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!கொரோனா தடுப்பூசி - சமூக ஊடகத்தில் உதவி கேட்டால் நடவடிக்கையா? வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!

குணமடைந்தவர்கள் எத்தனை பேர்

குணமடைந்தவர்கள் எத்தனை பேர்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,66,756 ஆகும். இன்று ஒரே நாளில் 16,007 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,37,582 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

1,43,571 கொரோனா பரிசோதனை

1,43,571 கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று 1,15,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,43,571 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,26,62,407 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2,22,78,880 பேருக்கு பரிசோதனை

2,22,78,880 பேருக்கு பரிசோதனை

இன்று ஒரே நாளில் 1,38,235 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,22,78,880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

113 பேர் மரணம்

113 பேர் மரணம்

இன்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,046 பேராக அதிகரித்துள்ளது.

English summary
In Tamil Nadu, 18,692 people were affected by corona in a single day today. 113 people died in a single day to Corona. The total number of corona victims in Tamil Nadu has risen to 11,66,756 so far. The death toll from the corona has risen to 14,046.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X