தமிழகத்தில் ஒரே நாளில் 19 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. 113 பேர் மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் 18,692 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 113 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 18,692 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு 113 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,66,756 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,046 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 18,692 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்கள் எத்தனை பேர்
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,66,756 ஆகும். இன்று ஒரே நாளில் 16,007 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,37,582 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

1,43,571 கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று 1,15,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,43,571 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,26,62,407 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2,22,78,880 பேருக்கு பரிசோதனை
இன்று ஒரே நாளில் 1,38,235 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,22,78,880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

113 பேர் மரணம்
இன்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,046 பேராக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications