காலையில் டுவிட்டர தொறந்தா.. அசத்திய ஓபிஎஸ்... அற்புதமான #FriendshipDay வாழ்த்து
சென்னை: இன்று உலகம் முழுதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.

நண்பர்கள் தினம் என்பது வெறும் கொண்டாட்ட நாள் என்பது மட்டும் இல்லை. அன்றைக்கு நம்முடைய பழைய நண்பர்கள், உற்ற நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தவறவிட்ட நட்புகள் ஆகியோரின் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பதோடு, பல விஷயங்களை அசைபோட தூண்டும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
— O Panneerselvam (@OfficeOfOPS) August 4, 2019
இடுக்கண் களைவதாம் நட்பு
எனும் வள்ளுவர் கூற்றின்படி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவும் உறவாகிய நட்பினை சிறப்பிக்கும் இத்தினத்தில், அனைவருக்கும் #FriendshipDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்.
எல்லாருக்குமே நண்பர்கள் இருப்பார்கள் நண்பர்கள் இல்லாதவர்கள் நடைபிணம் போல் தான் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம். இந்த நன்நாளில் டுவிட்டரை திறந்த உடன் காலையில் கண்ணில் பட்டது எல்லாம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தான். அதிலும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நண்பர்கள் தின வாழ்த்துக்களை திருக்குறளை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
எனும் வள்ளுவர் கூற்றின்படி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவும் உறவாகிய நட்பினை சிறப்பிக்கும் இத்தினத்தில், அனைவருக்கும் #FriendshipDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்." என கூறியுள்ளார்.
ஒ பன்னீர்செல்வம் மட்டுமல்ல பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications