ராமதாஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தார் சசிகலா! தமிழக நலனுக்காக இணைந்திருப்பதாக அறிவிப்பு
சென்னை: விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்திருப்பதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். கூட்டணி, 234 தொகுதிகளும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. மறுபுறம் இரு அணியாக செயல்பட்டு வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அணி, அதாவது அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறது.
கட்சிக்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, தேர்தலுக்கு பிறகு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ராமதாஸ், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில்தான் சசிகலா, தைலாபுரம் ராமதாஸ் இல்லத்திற்கு சென்று கூட்டணியை பேசி முடித்திருக்கிறார்.
கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "நாங்கள் புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் வேட்பாளர்கள் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெறுவார்கள்" என்று கூறியிருக்கிறார். அதேபோல ராமதாஸ் பேசுகையில், "எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள், கூட்டணியில் இணையலாம்" என்று கூறியிருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications