மீட்டர் பாக்ஸில் மாற்றம்? தமிழக அரசின் ரூ.17,307 கோடி மெகா பிளான் - இலவச மின்சாரத்தில் புதிய அப்டேட்
சென்னை: மின் வாரியத்திற்கு ரூ.17,307 கோடி மானியம் வழங்க தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் வீடுகள், விவசாயம் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் மானிய விலையிலான மின்சாரத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு (TANGEDCO) நடப்பு நிதியாண்டில் 17,307 கோடி ரூபாயை மானியமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இப்போதுள்ள நடைமுறைப்படி, வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக மின்சார வாரியம்
இதேபோல், விவசாய இணைப்புகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு மின்சாரம் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர, விசைத்தறிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற சில குறிப்பிட்ட வகை மின் இணைப்புகளுக்கும் அரசு மானிய விலையிலேயே மின்சாரத்தை விநியோகம் செய்கிறது.
இப்படி பல்வேறு பிரிவினருக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதால் மின் வாரியத்திற்கு ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட, அரசு ஆண்டுதோறும் மானியத் தொகையை வழங்க வேண்டும்.
மானியத்தொகை
இந்த மானிய தொகையை எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே ஆய்வு செய்து நிர்ணயம் செய்கிறது. அதன்படி, 2026 - 27ம் நிதியாண்டிற்காக, வீடு உள்ளிட்ட மொத்தம் 14 பிரிவுகளின் கீழ் 17,307 கோடி ரூபாயை அரசு வழங்க வேண்டும் என ஆணையம் இப்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த மொத்த மானிய தொகையில், வீடுகளுக்கான மின் பயன்பாட்டிற்கு மட்டும் அதிகபட்சமாக 8,428 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விடுவிப்பதில் ஆணையம் சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது. குறிப்பாக, இந்த முழுத் தொகையையும் 4 காலாண்டுகளாக பிரித்து, ஒவ்வொரு காலாண்டிற்கும் தனித்தனி தவணைகளாக மின் வாரியத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் வாரியத்தின் நிதி நிர்வாகத்தை சீர்செய்யவும், முறையான மானிய விநியோகத்தை உறுதி செய்யவும் ஆணையம் இந்த விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான மானியக் கணக்கீடுகள் மற்றும் அதனை விடுவிக்கும் முறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன..
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் - சென்னை
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமையைச் சீரமைப்பதில் மிக முக்கியப் பங்கினை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மானியத் தொகையை 4 காலாண்டுகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என்ற நிபந்தனை, வாரியத்தின் மாதாந்திர செலவினங்களையும், பராமரிப்பு பணிகளையும் தடையின்றி மேற்கொள்ள உதவும். அரசின் இந்த நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மின் வாரியத்தின் அடுத்தகட்டத் திட்டமிடலுக்கு வலுசேர்ப்பதோடு, பொதுமக்களுக்கான தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் வழிவகை செய்யும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications