அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பா? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் என்ன?
சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 என உயர்வதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களின் பதவிக்காலம் 58 வயது வரை ஆகும். 58 வயது ஆனதும் அவர்கள் ஓய்வு பெறுவார்கள். உயர் பதவிகளுக்கு சில நேரங்களில் பதவி நீட்டிப்புகள் வழங்கப்படும். இது அவர் பணிசெய்யும் பதவியை பொருத்தது, ஆளும் அரசு சார்ந்தது ஆகும்.

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, வயதை அதிகரிக்க எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வதாக வெளியாகும் தகவல் வதந்தி. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நடந்தது என்ன?: தமிழக அரசில் பணியாற்றி வரும் 40 சதவீதம் பேர் அடுத்தடுத்த ஆண்டுகளிலஸ் ஓய்வு பெறவுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டின.
அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் இதுகுறித்து 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில்தான் தமிழக அரசின் உண்மைக் கண்டறியும் குழுவான தமிழ்நாடு ஃபேக்ட் செக், இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications