தமிழக அரசின் மினி கிளினிக் திட்டம் இன்று தொடக்கம்... 2,000 இடங்களில் செயல்பட ஏற்பாடு..!
சென்னை: தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் மினி கிளினிக் செயல்படும் வகையில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மினி கிளினிக் மூலம் சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற முடியும்.
கடந்த செப்டம்பர் மாதம் மினி கிளினிக்குள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் -ஒரு செவிலியர்- ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவை எளிதாக கிடைக்கும் வகையில் இந்த மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் இடங்களில் திறக்கப்படும் நிலையில், சென்னையில் மட்டும் 200 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 'முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம்' என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை அரசு பணிக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை பொறுத்தவரை ராயபுரம், மயிலாப்பூர், வியாசர்பாடி ஆகிய மூன்று இடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று முதற்கட்டமாக சென்னையில் 20 இடங்களிலும் படிப்படியாக மீதமுள்ள இடங்களிலும் மினி கிளினிக் அமைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications