துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்? நேரில் சென்று அழைத்த ஆளுநர் ரவி
சென்னை: துணை வேந்தர்கள் மாநாடு குறித்து இப்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி ஆளுநர் துணை வேந்தர் மாநாட்டை நடத்தவே கூடாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. இதற்கிடையே துணை வேந்தர் மாநாட்டில் கலந்து கொள்ளத் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய அனைத்து மசோதாக்களும் உச்ச நீதிமனறம் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்திருந்தது. இது மிக முக்கியமான ஒரு தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இனி துணை வேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க முடியும்.

துணை வேந்தர் மாநாடு
இதற்கிடையே உதகையில் வரும் ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்தச் சூழலில் தான், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்திருந்தது.
ஆளுநர் மாளிகை விளக்கம்
அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டமளிப்பு விழாக்களை நடத்தவும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தவும் உரிமை ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
இதற்கிடையே டெல்லி சென்ற ஆளுநர் ஆர் என் ரவி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார். துணை வேந்தர் மாநாட்டில் பங்கேற்க ஜெகதீப் தன்கரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 25ம் தேதி விமானம் மூலம் கோவை செல்லும் ஜெகதீப் தன்கர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்குச் செல்கிறார். அங்கு நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஜெகதீப் தன்கர் கருத்து
ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜெகதீப் தன்கர் கூறிய கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. அதாவது குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது சரியானது இல்லை எனக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவரை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் ஜெகதீப் தன்கரின் பேச்சு கவனத்தை பெறும் என தெரிகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications