சூப்பர் பிளான்.. 24, 25 தேதிகளில் வீடு தேடி ரேஷன் டோக்கன் வருகிறது மக்களே.. தமிழக அரசுக்கு சபாஷ்!
ரேஷன் பொருட்களை வாங்க டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும், ரேசன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் சூப்பர் அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.. இதனால் பெரும்பாலானோர் வேலைககளை இழந்துள்ளனர்.. ஏழை மக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசு அறிவித்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களை ஈர்த்து வருகிறது.. ஒரு பக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தாலும் மற்றொரு மக்கம் தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் அரசு மிக மிக தீவிரமாக இறங்கி உள்ளது.

முதலமைச்சர்
ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்... இது சம்பந்தமாக தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டோக்கன்
அதன்படி, வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என்றும் , அந்த டோக்கன்களின் அடிப்படையில் மக்கள் ரேஷன் கடையில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

அட்டைதாரர்கள்
"அதில், நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும்.சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்தக் டோக்கன்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும் அதன்படி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் உரிய நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

செய்திக்குறிப்பு
இந்த நடைமுறையை பொதுமக்கள்.முறையாக கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனை வீடுகளுக்கே வந்து தரும் இந்த அறிவிப்பினால் மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications