மோடியின் ஊரடங்கு அழைப்புக்கு ஆதரவு.. நாளை மறுநாள், தமிழகத்தில் ஹோட்டல்கள், கடைகள் மூடப்படுகிறது
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் ஹோட்டல்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்று தெரிவித்தார்.

மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓட்டல் சங்கம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுபடி ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஓட்டல்களை மூடி வைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஓட்டல்கள் இயங்காது. எங்கள் சங்கத்தின்கீழ், சென்னையில் மட்டும் சுமார் 40,000 ஹோட்டல்கள் இயங்குகின்றன. அவை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல, தமிழகம் முழுக்க நாளை மறுநாள் கடைகள் அடைப்பு செய்யப்படும் என்று, வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் விக்கிரமராஜா இன்று அறிவித்தார். அதேபோல, சேலத்தில், இன்று முதல் 3 நாட்கள் தங்க, வெள்ளி, வைரம் கடைகள் மூடப்படும் என்று, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மோடியின் அறிவிப்புக்கு, ஆதரவாக பல்வேறு சங்கங்களும் அடுத்தடுத்து ஆதரவு அறிக்கைகளை வெளியிடும் என்று கூறப்படுகிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications