Mobile Muthamma: தமிழக ரேஷன் கடைகளுக்கு வரும் "முத்தம்மாக்கள்"! இனி பணம் இல்லாமல் சர்க்கரை வாங்கலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் (Fair Price Shops / ரேஷன் கடைகள்) புதிய "மொபைல் முத்தம்மா" (Mobile Muthamma) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள் வாங்கும் ரேஷன் பொருட்களுக்கு QR கோடு ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்தலாம், இதனால் ரொக்கப் பணம் தேவை இல்லாமல், நேரடியாக அரசு கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெறும்.

mobile Muthamma

தமிழ்நாட்டில் 34,776 ரேஷன் கடைகள் உள்ளன. இவை தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC), கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கடைகள் 2.25 கோடி ரேஷன் அட்டைகளுக்கு சேவை வழங்குகின்றன.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள்

  • பச்சை அரிசி
  • புழுங்கல் அரிசி
  • கோதுமை
  • சர்க்கரை
  • பாமாயில்
  • மண்ணெண்ணெய்
  • துவரம் பருப்பு

பொருட்கள் வழங்கும் போது ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற சில பொருட்களுக்கு ரொக்கமாக பணம் பெறப்படும், இதனால் சில நேரங்களில் கடைகளில் சில்லரை குறைவு ஏற்படும்.

"மொபைல் முத்தம்மா" திட்டத்தின் நோக்கம்

  • ரொக்கப் பணம் இல்லாமல் டிஜிட்டல் ரேஷன் வாங்கும் வசதி
  • பணப்பரிவர்த்தனைகளை முற்றிலும் நேரடியாக அரசுக்கு சேர்க்கும்
  • முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும்

திட்டம் எங்கே செயல்படும்?

  • முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்படுகின்றன
  • பின்னர் 1500 ரேஷன் கடைகள் சென்னையில் செயல்படுத்தப்படும்
  • பயனாளர்கள் QR கோடு ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த முடியும்
  • படிப்படியாக பேடிஎம், யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும்
  • ஒவ்வொரு கடைக்கும் தனி QR கோடு வழங்கப்படும்
  • பயனாளர்களுக்கான பயிற்சி
  • அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கும்
  • மத்திய கூட்டுறவு வங்கியின் உதவியுடன் UPI சேவைகள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் எளிமையாக நடைபெறும்

எதிர்பார்ப்பு

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிமை, பாதுகாப்பு, நேர்த்தியான பரிவர்த்தனை வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ரொக்கப் பணம் தேவையில்லாததால், ரேஷன் கடைகளில் பணப்பரிவர்த்தனை முறைகள் விரைவாக, குறைவான பிழையுடன் நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. அதன்படி பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் போன் மூலம் யுபிஐ வைத்து பணம் செலுத்த முடியும். இப்போது கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதை வைத்து பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் டெபிட் கார்ட் மூலமாகவும் பணத்தை இனி கிராம பஞ்சாயத்துகளில் செலுத்த முடியும். இந்த புதிய முறை மூலம் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+