'ஹெலிகாப்டர் டிப்ளமஸி'.. தமிழகத்தை விட்டு போன ஃபாக்ஸ்கான், HCL! ரூ.3,700 திட்டம் உ.பிக்கு தாவியது
சென்னை: தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான், ஹெச்சிஎல் நிறுவனத்தின் சார்பில் வர இருந்த செமி கண்டக்டர் ஆலை தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு மாறியிருக்கிறது. இதனால் ரூ.3,700 கோடி அளவிலான முதலீடுகள் கையை விட்டு போயிருக்கின்றன.
இந்த அளவுக்கான முதலீடு நிச்சயம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், வாய்ப்பை தமிழகம் நழுவவிட்டுவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

செமி கண்டக்டர்தான் இனி எதிர்காலம் என்று பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், தமிழகம் இந்த வாய்ப்பை சாதூர்யமாக பயன்படுத்தி, உற்பத்தி ஆலையை இங்கு நிறுவி இருக்க வேண்டும். ஆனால் வாய்ப்பு உத்தரப் பிரசதேத்திற்கு சென்றிருக்கிறது. இது குறித்து திமுக சார்பில் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த தலைவர்கள், "மத்திய அரசு தலையீடு செய்து வாய்ப்புகளை தட்டி பறித்தவிடுகிறது. இதற்கு 'ஹெலிகாப்டர் டிப்ளமஸி' என்று பெயரே இருக்கிறது" என கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஷிவ் நாடாரின் நிறுவனம்தான் ஹெச்சிஎல். அதேபோல தமிழகத்தில் ஏற்கெனவே தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் செமி கண்டக்டர் ஆலையை அமைப்பது தொடர்பாக பேச்சுகள் எழுந்தபோது தெலங்கான மாநிலம் முந்திக்கொண்டு இந்த ஆஃபரை பயன்படுத்த முயன்றது. ஆனால் தமிழ்நாடு சிறந்த உள்கட்டமைப்பை கொண்டிருப்பதால், ரூ.3,700 கோடி ஆஃபர் நம் கைக்கு கிடைத்தது. இருப்பினும் இது தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு கைமாறியிருக்கிறது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது.
நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதலில் தமிழ்நாட்டை அணுகுகிறார்கள். இங்கு தொழில் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதை உணர்ந்த பின்னர் தொழில் தொடங்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதற்கிடையில் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு நடக்கிறது. அதன் பின்னர் உ.பி பக்கம் போய்விடுகிறார்கள் என்று திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், சரியான வாய்ப்புகளும், சலுகைகளும் கிடைப்பதால்தான் நிறுவனங்கள் உ.பிக்கு செல்கிறது என பாஜகவினர் கூறுகின்றனர். பாஜக மாநிலதுணை தலைவர் திருப்பதி நாராணயனன் கூறுகையில், உத்தரப் பிரசதேசம் அதிக ஆஃபர்களை கொடுத்ததால் வாய்ப்புகள் கையைவிட்டு சென்றிருக்கின்றன. தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்தான். ஆனால், முன்பு 5 கி.மீ தொலைவில் இருந்த மற்ற மாநிலங்கள் தற்போது ஒரு சில மீட்டர்கள் வரை பின்னே வந்துவிட்டன. நமக்கும் மற்ற மாநிலங்களுக்குமான இடைவெளி குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications