Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று ஆரம்பம்.. 8.20 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுவையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 3.89 லட்சம் மாணவர்களும், 4.30 லட்சம் மாணவிகளும் என மொத்தம் 8.20 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வானது 3,302 மையங்களில் 7.94 லட்சம் போ் தேர்வு எழுதினர் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு வருகிற 25 ஆம் தேதி வரை நடக்கிறது.

Tamil Nadu Plus 1 public examination begins today 8 20 lakh students write

முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 8.20 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 3,302 தேர்வு மையங்களில் 3.89 லட்சம் மாணவர்களும், 4.30 லட்சம் மாணவிகள் தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

ஒவ்வொரு தேர்விற்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி மாணவர்கள் முறையாக தேர்வுகளுக்கு தயாராக முடியும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது போக வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் காப்பி அடிப்பதை தவிர்க்க செல்போன் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வின் போது பிற மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பது, தேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+