தமிழகத்தில் மேலும் 910 பேருக்கு கொரோனா... சென்னையிலும் பாதிப்பு குறைவு!
சென்னை: தமிழகத்தில் மேலும் 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சென்னையில் மேலும் 246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 75-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,19,845- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,146-ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,99,427- பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 8,272- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 62,065 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 62,401 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 75-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.