ஓய்ந்தது மழை.. தொடர்கிறது பனிமூட்டம்.. அடுத்த 2 நாட்களுக்கு மழை வறண்ட வானிலை.. புது அப்டேட்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களில் தமிழகம் முழுக்க பெய்து வந்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது.. மாறாக கடும்பனி நிலவி வருகிறது.. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் குளிருக்கு காலை 7 மணி வரை வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் வலுவிழந்தது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது.

புதுவை
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது.. அதில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதால், 28.12.2022 முதல் 30.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 31.12.2022 மற்றும் 01.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.

மேகமூட்டம்
அதன்படியே சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவு இருந்தது.. இந்நிலையில், நேற்றைய தினம் மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதில், இன்று முதல் 2ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 31.12.2022 முதல் 02.01.2023 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
இதனிடையே வறண்ட வானிலை மற்றும் பனிமூட்டம் குறித்து செந்தாமரைக்கண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், நாட்களுக்கு முன்பு, குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இப்போது தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு, வட மாவட்டங்களின் உள்பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.

பனிமூட்டம்
அடுத்து வரும் நாட்களிலும் பனிமூட்டம் தொடர வாய்ப்புள்ளது.. இன்றும், நாளையும், பிறகு 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்று தெரிவித்துள்ளார். வறண்ட வானிலை நிலவினாலும், அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு ஓரளவு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications