வளிமண்டல சுழற்சியால் 3 நாட்களுக்கு இடியுடன் மழை... கோடையில் வானிலை சொன்ன ஜில் அறிவிப்பு
குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்
சென்னை: தமிழகத்தில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

இன்றும் நாளையும் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும். தமிழகம், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.
குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வாலிநோக்கம், தென்காசியில் 1 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
மதுரை, ஈரோடு, கரூர் பரமத்தி, சேலம், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பம் பதிவானது. சேலம், வேலூர், திருத்தணி, கோவை, தருமபுரியிலும் 98 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications