Singer Shakti Shanmugaraja death: பிரபல ஆன்மீக பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்! பக்தர்கள் சோகம்
சென்னை: பல்வேறு ஆன்மீக பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் சக்தி சண்முகராஜா (Spiritual Singer Shakti Shanmugaraja death) இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 73. வயது மூப்பு மற்றும் அது சார்ந்த உடல்நல பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த சக்தி சண்முகராஜா மாலை காலமானார்.
தமிழில் பல ஆன்மீக பாடல்களைப் பாடியவர் பாடகர் சக்தி சண்முகராஜா. குறிப்பாக இவர் பாடிய அம்மன் பாடல்களை மிகவும் புகழ் பெற்றவை. தமிழகத்தில் ஆடி மாதமே வந்தாலே இவரது பாடல்கள் தான் கிராமங்கள் முழுக்க ஒலிக்கும். அந்தளவுக்கு அம்மன் பாடல்களுக்குத் தனது குரல் மூலம் உயிர் கொடுத்திருப்பார்.

மலையனூரு அங்காளியே, வேப்பிலை நாயகி, ஆடி வரா ஓடி வரா என ஏகப்பட்ட ஆன்மீக பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, அம்மனை வழிப்பட்டு வந்தார்.
இந்தச் சூழலில், 73 வயதான வயது மூப்பு மற்றும் அது சார்ந்த உடல்நல பிரச்சினை காரணமாகச் சக்தி சண்முகராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 73. தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர் மாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காசிமேடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஆடி மாதம் வந்தாலே இவரது பாடல்கள் தான் ஒலிக்கும். அந்த ஆடி மாதத்திலேயே இவர் மறைவு, பக்தர்களுக்கு பெரும் சோகத்தையும் வலியையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது












Click it and Unblock the Notifications