Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிக்கரணை வெள்ளத் தடுப்பு.. தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாகவே சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் சரியில்லை என கூறி, தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்க பாண்டியனையும், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்எஏ அரவிந்த் ரமேஷையும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். இவர்களுடன் தவெக மற்றும் பாஜகவும் இணைந்து தங்கள் பங்கிற்கு விமர்சிக்க தொடங்கியது. இந்த சூழலில் பள்ளிக்கரணையில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்பியும், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏவும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி போன்றவை சரியில்லை என்றால், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளை மக்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களும் சரி செய்து தருவார்கள். ஆனால் சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் அது முற்றிலும் வித்தியசமாக இருந்து வருகிறது.

Tamilachi Thanga Pandian MP Sholinganallur Aravind Ramesh MLA arrive at Pallikaranai

ஏனெனில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோரை குறிவைத்து தான் விமர்சனங்களை பலர் எழுப்பி வருகிறார்கள்.. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், மற்ற எந்த எம்பி, எம்எல்ஏவையும் விட தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சமூக வலைதளங்களில் குறிவைத்து அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக திமுகவினர் நம்புகிறார்கள்.

இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாகவே பள்ளிக்கரணை, மேடவாக்கம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மோசமான சாலைகள், குப்பைகள் நிறைந்த பகுதிகள், ஆகாயத்தாமரை நிறைந்த ஏரி, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கும் சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கும் சாலைகளில், மழை நீர் தேங்கி நிற்பது தொடர்பான படங்கள், பல நாட்களாக நிறைவு பெறாத சாலை பணிகள் மற்றும் பள்ளம் நிறைந்த சாலைகள் என பல்வேறு படங்கள் பகிரப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின்ர் இந்த புகைப்படங்களைஅதிக அளவில் பரப்பு அரசை கேள்வி கேட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோரை டேக் செய்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதேபோல் அதிமுகவினரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். பாஜகவினரும் தங்கள் பங்குக்கு கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் பள்ளிக்கரணை மற்றும் அதன சுற்றுவட்டாரங்கள் தொடர்பான புகைப்படங்களே இணையதளங்களை ஆக்கிரமித்தன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி உடனுக்குடன் குறை சொன்னவர்களுக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்தது. பல சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியும் தூர்வாரப்பட்டு, அந்த பகுதியில் 1000 அடி தண்ணீரை பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைத்து, அதனை வெளியேற்றும் வகையில் மதகும் அமைக்கப்பட்டது. அதனை அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அதேபோல் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளும் நடந்து வருகின்றன . இதனை தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேற்நறு ஆய்வு செய்தனர். இதுபற்றி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று வெளியிட்ட பதிவில், சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு மேம்பாட்டு பணிகளை அரவிந்த் ரமேஷ் , சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் திரு.அப்தாப் ரசூல் இ.ஆ.ப ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன்...ஆய்வின்போது, 14-வது மண்டலக்குழுத் தலைவர் - பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி.ரவிச்சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கலந்துகொண்டனர்"இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+