அதிமுக ஆட்சி முடியும்போதுதான் ரஜினி அரசியலுக்கு வருவார்.. தமிழருவி மணியன் பரபரப்பு பேச்சு
சென்னை: அதிமுக, திமுகவுடன் ரஜினிகாந்த் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டார் என தமிழருவி மணியன் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
"நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதியிலும் போட்டியிட போகிறோம். போருக்கு தயாராகுங்கள் என கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் முன்பு பேசியிருந்தார். இதையடுத்து அவர் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் இன்று வரை தொடங்கவில்லை. காரணம் கேட்டால் நமது இலக்கு 234 தொகுதிகள்தான் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். போதாக்குறைக்கு இவரது அண்ணன் சத்தியநாராயணா வேறு ஏதாவது பேசி விட்டு செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பை வரவேற்ற தமிழருவி மணியன் கூறுகையில் அதிமுக, திமுகவுடன் எப்போதும் ரஜினி கூட்டணி வைக்கமாட்டார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடியும் போது ரஜினி அரசியலுக்கு வருவார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து வரவேண்டுமெனில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என தமிழருவி மணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications