டிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை வீரமணி கண்டித்தாரா?தமிழிசை கேள்வி
சென்னை : டிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை கி வீரமணி கண்டித்தாரா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பேராளுமைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு வருகிறார். அதன்படி தனது 24வது மற்றும் நிறைவு ஆய்வுக்கட்டுரையான பெரியார் குறித்த தமிழாற்றுப்படை ஆய்வுக்கட்டுரையை திருச்சியில் நேற்று வெளியிட்டார்.
இதில் திராவிடர் கழகத்தலைவர் கி வீரமணி, பேராசிரியர் அருணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வைரமுத்து உருக்கமாக பேசினார்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்..பயணிகள் பீதி
அமைதி காத்தேன்
அப்போது தன் மீதான பழிச்சொற்களை தாங்கிக்கொள்ள பெரியாரே காரணம். தமிழாற்றுப்படை முடியட்டும் என்பதற்காக தன் மீது பழிச்சொற்கள் கூறப்பட்டபோது அமைதி காத்ததாகவும் கூறினார்.
நகல் எடுக்க முடியாத அசல் மேலும் தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன வேலை என கேட்பவர்கள் தமிழையே அறியாதவர்கள். நகல் எடுக்க முடியாத அசல் தலைவர் பெரியார் என்றும் வைரமுத்து உருக்கமாக பேசினார்.
மேலும் தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன வேலை என கேட்பவர்கள் தமிழையே அறியாதவர்கள். நகல் எடுக்க முடியாத அசல் தலைவர் பெரியார் என்றும் வைரமுத்து உருக்கமாக பேசினார்.
|
திருமாவின் வேஷம்
இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சுக்குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, காற்று தண்ணீரைப்போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுபவர் பெரியார்....கவிஞர் வைரமுத்து. உங்கள் தலைவரின் அரசியல் வாரிசுகள்? தேர்தல் நேரத்தில் பெரியார் படத்தை அவசரமாக நீக்கிவிட்டு பனைமரத்தை போட்டதை கண்டித்தீர்களா? சிதம்பரத்தில் திருமாவின் பக்தி வேஷம்/கலைஞர் குடும்பம் கோவில்களில்??
|
கனிமொழியை கண்டித்தாரா?
பெரியாரை இழிவுபடுத்தியவர்கள் திருந்துவார்கள்?.......வீரமணியின் கூற்று திமுக தலைவரின் தங்கை கனிமொழிக்கு பொருந்தும்???தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலின்போது கனிமொழியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கலைஞர் மகளை வீரமணி கண்டித்தாரா? இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.