திருச்சி சூர்யாவுக்கு மீது பாய்ந்த ஆக்ஷன்.. பதவி பறிப்பின் பின்னணியில் தமிழிசை விவகாரம்.. பரபர தகவல்
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி எஸ் சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவரது நீக்கத்தின் பின்னணியில் தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் திமுகவில் பயணித்து வந்தார். திமுகவில் இருந்தவரை கனிமொழி எம்பியின் ஆதரவாளராக அறியப்பட்டார். அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார்.
பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். அதோடு பாஜகவில் இதர இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் தான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி எஸ் சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் திருச்சி சூர்யாவின் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியின் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதியிலும் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, ‛‛ நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.
தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள்.அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை'' என்றார்.
மேலும் பாஜகவில் ரவுடிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலை மற்றும் தமிழிசைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது கட்சி மேலிடம் வரை சென்ற நிலையில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற போது தமிழிசை சவுந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் கண்டித்த வீடியோ வெளியானது. அதன்பிறகு அண்ணாமலை நேரில் தமிழிசையை சந்தித்து கொண்டனர். இதன்மூலம் இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் கூட அண்ணாமலையின் ஆதரவாளராக உள்ள திருச்சி சூர்யா, தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் வலைதளங்களில் தமிழிசை சவுந்தரராஜனை அவர் தாக்கி பேசினார். யூடியூப்பில் திருச்சி சூர்யா அளித்த பேட்டியில், ‛‛தமிழிசை சவுந்தரராஜன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு சந்தேகம் உள்ளது. அதேவேளையில் தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவுக்கு எதிராகவும், மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும் செயல்படுகிறார். அவர் மீண்டும் பாஜக தலைவரானால் நான் கட்சியை விட்டு சென்றுவிடுவேன்'' என்று கூறினார்.
இது கட்சி மேலிடத்துக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் பாஜகவில் திருச்சி சூர்யாவின் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அண்ணாமலையின் ஆதரவாளராக உள்ளதால் அவர் கட்சியில் சாதாரண தொண்டராக தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் திருச்சி சூர்யா மீது பாஜக இப்படி நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திருச்சி சூர்யா இதற்கு முன்பு 6 மாதம் வரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த முறை கட்சியில் இருந்து நீக்கப்படாமல் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!











Click it and Unblock the Notifications