Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா.. அம்மானு சொல்லுவேனே! மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணத்தை கேட்டு.. உடைந்து கலங்கிய தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். பங்காரு அடிகளாரின் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

82 வயதாகும் பங்காரு அடிகளார் இன்று மாலை மரணம் அடைந்தார். முக்கியமாக இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இன்றும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. அவருக்கு மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது . இதை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்: இந்த நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பேசிய அவர்.. நான் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை தீவிரமாக பின்பற்றி வருபவர். சமீபத்தில் கூட அங்கே சென்று அம்மா மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்தேன்.

Tamillisai Soundararajan crying send off to Melmaruvathur Bangaru Adigalar

பெண் பக்தர்கள் அவருக்கு அதிகம். அவரை எல்லோரும் அம்மா.. அம்மா என்று அழைப்பார்கள். நானும் அப்படியே அழைப்பேன். புதுச்சேரியில் இருந்து எப்போது சென்னை சென்றாலும்.. செல்லும் வழியில் அவரை சென்று சந்திப்பேன். அவரிடம் பேசுவேன்.

அவர் ஆன்மீகத்தில் பல புரட்சிகளை செய்தார். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம் என்று கொண்டு வந்தார். பெண்களும் இருமுடி காட்டும் முறையை கொண்டு வந்தார். அதெல்லாம் போக ஆன்மீகத்தில் இன்னும் பல சாதனைகளை செய்தார்.

மேலும் அவர் பெண்களிடம் பேசும் விதம் ஆச்சர்யமாக இருக்கும். அவர் மனோ ரீதியாக பெண்களை அமைதிப்படுத்தி.. அவர்களின் குறைகளில் இருந்து வெளியே வரும் விதமாக பேசுவார். மனோ தத்துவவியல் ரீதியாக அவரின் பேச்சுக்கள் மிக சிறப்பாக இருக்கும் என்று தமிழிசை இரங்கலில் தெரிவித்துள்ளார்.

( திடீர் மாரடைப்பு.. அதற்கு முன் நெஞ்சு வலி.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு நடந்தது என்ன? )

ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கலில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் பங்காரு அடிகளார் தகர்த்தார். பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு.

தமிழிசை சௌந்தரராஜன்:

பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது தான் தாம் அவதரித்ததன் நோக்கம் என்று பங்காரு அடிகளார் அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப மகளிர் முன்னேற்றம் என்ற உன்னத நோக்கத்திற்காக அருள்திரு. பங்காரு அடிகளாரும், ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆற்றிய பணிகள் போற்றத் தக்கவை. இயற்கையை போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்ற பங்காரு அடிகளாரின் அறிவுரை ஆன்மிக எல்லையை தாண்டி அனைவருக்கும் பொதுவானது. அவரது அறிவுரை எவ்வளவு உண்மையானது என்பதை காலநிலை மாற்றம் என்ற பெயரில் இன்று நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.

அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்களின் கல்விப் பணியும் பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியில் தொடங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை & அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட அனைத்து புலங்களிலும் பட்டம் வழங்கும் கல்லூரிகள் வரை தரமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவை வழங்குதல், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க பொது மற்றும் பல் மருத்துவமனைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் என அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வாயிலாக அருள்திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மேற்கொண்ட பணிகள்அனைத்தும் பாராட்டத்தக்கவை.

பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்., என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+